ஏ.டி.எம் மையங்களில் காத்து நின்றோருக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கிய தி.மு.க.வினர்

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. ஆனால், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், பணம் வாங்குவதற்கும் முதியோர் மற்றும் பெண்கள் பல மணி நேரம் காத்து நிற்கின்றனர். நீண்ட நேரம் நிற்பதால் சிலர் மயக்கமடைகின்றனர்.



இந்த நிலையில் கோவை மாவட்ட திமுக இளைஞரனி சார்பில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு குடிநீர், டீ மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.



இது குறித்து தி.மு.க இளைஞரனியின் மாநில துணை செயலாளர் பாரி கூறியதாவது:- கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை தி.மு.க. மனதார வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு, மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது. போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகளை அரசு இருப்பு வைத்துக்கொண்டு இந்த திட்டத்தை அமுல் படுத்தியிருந்தால், இத்தகைய பிரச்சனைகள் எழுந்திருக்காது. வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் நீண்ட நேரம் நிற்கும் மக்கள் பல இடையூறுகளை சந்திக்கின்றனர்.



இதை தொடர்ந்து, தளபதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் களைத்துப்போய் நிற்கும் மக்களுக்கு குடிநீர், டீ மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை வழங்கினோம். இன்று மட்டும் சுமார் 1500 குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட உள்ளது. தொடர்ந்து திங்கட்கிழமை அன்று ஆர்.எஸ்.புரம் பகுதியிலும் சாய்பாபா காலனி பகுதியிலும் இவற்றை விநியோகிக்க உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் தி.மு.க. உறுப்பினர்களான பிரபுராம், சந்திரசேகர், சிராஜ்தீன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...