சிங்காநல்லூர் குளக்கரையில் பனைமர நாற்றுப்பண்ணை மையம் திறப்பு

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் பனைமர நாற்றுப்பண்ணை மையம் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.



இம்மையம் குளக்கரையில் மரக்கன்றுகளை அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. 18 ஜூன் 2016ம் ஆண்டு கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் குளத்தை மறுசீரமைக்கும் திட்டம் தொடங்கியது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார். 



இத்திட்டத்தில், குளங்களை பாதுகாப்பதற்கும், குளத்தின் மண் அரிப்பை தடுத்து வளப்படுத்துவதற்கும் குளத்தை சுற்றி பனை மரங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு பனை மரம் நாற்றுப்பண்ணை மையம் குளத்தின் அருகில் திறக்கப்பட்டது.



இதன் மூலம் குளத்தை சுற்றி மரக் கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று சிங்காநல்லூர் குளத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் மரக்கன்றை நட்டு வைத்தார். இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...