இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் 'ஒன்றிணைவோம்' கருத்தரங்கு

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் 'ஒன்றிணைவோம்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள தொழில் வர்த்தக சங்கங்களின் அனைத்து தலைவர்களையும், பொறுப்பாளர்களையும் இணைக்கவும் நம் மாநிலத்திற்கு முன்னேற்றத்தையும் வளத்தையும் கொண்டுவருவதற்குமான ஒரு முன்முயற்சியே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.



இந்நிகழ்ச்சியில், சுமார் 18 தொழில் வர்த்தக சங்கங்கள் கலந்து கொண்டது. வணிக அமைப்புகள் நம் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல என்னென்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டது. மேலும் தமிழக பொருளாதாரத்தில் சில முக்கிய பிரச்சனைகளாக பல வகைகளில் பாதிப்பவை.




1. வரும் 1 ஏப்ரல் 2017ம் தேதி முதல் அமலாக்கவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை.
2. ரொக்க பணமில்லாத பொருளாதாரத்தை உருவாக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை.
3. தொழிலாளர் நிர்வாகம் போன்றவை, எப்படி தீர்ப்பது என முடிவு செய்வதே இதன் முக்கிய நோக்கம். 

'ஒன்றிணைவோம்' என்பது தமிழக முன்னேற்றத்திற்கு அவசியமான தளங்களில் தொழில் வர்த்தக அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து  செயல்படுவதற்கான ஓர் அமைப்பு. இதில், உங்களது முயற்சியில் பங்கெடுத்து மதிப்பு மிகுந்த கருத்துக்களை முன்வைத்து பொது விவாதங்களை உருவாக்கி உரிய விளைவுகள் ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கே கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. 

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...