பறவைகள் குறித்து குழந்தைகளிடம் ஆர்வத்தை ஊக்குவிக்க சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள்

சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.



அதன்படி இந்த வருடம் ஜி.டி.நாயுடு பள்ளியில் மாவட்ட அளவிலான பறவைகள் குறித்த ஓவியப் போட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை, கவிதை போட்டி, வண்ணம் தீட்டுதல், பறவைகளின் புகைப்படம் கொண்டு பெயர் கூறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.



சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பிரமோட் மேற்பார்வையில் ''இயற்கை'' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிக் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...