மனைவி இறந்த வருத்தத்தில் கணவர் தற்கொலை ?



விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (35). கோவையில் பி.என்.புதூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இவரது வீட்டின் கதவு பூட்டியே இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது வீட்டின் உரிமையாளர் தினேஷ்குமார் வீட்டின் கதவருகே சென்றபோது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது.

இதைத்தொடர்ந்து, தினேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்படவே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு சசிகுமார் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சாய்பாபா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சசிகுமாரின் மனைவி உயிரிழந்துவிட்டதால் அவர் மனமுடைந்து  தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...