ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (36). இவரும், இவரது மனைவியும் கடந்த வாரம் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்கை பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இவர்களுக்கான மருத்துவச் செலவிற்கு அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், விண்ணப்பிக்கும் பயனாளர் நேரில் வந்துதான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரகுமார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று ஸ்டக்சர் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மருத்துவக் காப்பீடு விண்ணப்பிக்க சென்றுள்ளார்.



விபத்தால் படுகாயமடைந்த ஒருவர் ஆம்புலன்சில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க வைத்தது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...