கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக்கோரி இந்து சமுதாய ஒற்றுமை மையத்தினர் உண்ணாவிரதம்


கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும், இந்து இயக்க தலைவர்கள் கொலை செய்யப்படுவதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்து சமுதாய ஒற்றுமை மையம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனியில் வானதிசீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு இந்து இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து இயக்க நிர்வாகிகள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்வதாகவும், இந்து இயக்கத் தலைவர்கள் கொலை சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, இதுவரை நடைபெற்றுள்ள பெரும்பாலான சம்பவங்களில் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது குறித்து பல முறை வலியுறுத்தியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், லவ்ஜிகாத் என்ற பெயரில் இந்து இயக்க பெண்களை குறிவைத்து ஏமாற்றும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...