செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய குழு கோவை வந்துள்ளது


செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்டவிளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய, மத்திய குழு தமிழகம் வந்துள்ளது  

இக்குழு, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை நிர்வாகிகளின் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,



'பழைய ரூபாய் நோட்டுகள்செல்லாது' என நவ., 8 இரவு மத்திய அரசு அறிவித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள்குறித்து கள ஆய்வு செய்வதற்காக நவ., 19ல், பிரதமர் மோடி 27குழுக்களை அமைத்தார். இதில், மூன்று பேர் கொண்ட குழு நேற்று தமிழகம் வந்தது. இதில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கூடுதல் செயலர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணைசெயலர் மற்றும் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை துணை செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில்  மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய நகர்ப்புறவளர்ச்சிச்துறை துணை செயலர் ஜானகி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து  வங்கிகளின் உயர்அதிகாரிகள் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள்,விவசாயிகள் ,சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.அப்போது, 100 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள்புழக்கம்; பழைய ரூபாய்நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்; ஏ.டி.எம்., மையங்களில் புதியநோட்டுகளை வினியோகிக்க செய்யப்படவேண்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர், வங்கிஅதிகாரிகள் மற்றும் அஞ்சல்துறையினருடன் ஆலோசனைநடத்திவிட்டு, டில்லி புறப்படுகின்றனர். 

இக்குழு, வரும் 25ம் தேதி கள ஆய்வுஅறிக்கையை  மத்திய அரசிடம் ஒப்படைக்க  உள்ளதாக தெரிய வருகிறது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...