செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய குழு கோவை வந்துள்ளது


செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்டவிளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய, மத்திய குழு தமிழகம் வந்துள்ளது  

இக்குழு, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை நிர்வாகிகளின் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,



'பழைய ரூபாய் நோட்டுகள்செல்லாது' என நவ., 8 இரவு மத்திய அரசு அறிவித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள்குறித்து கள ஆய்வு செய்வதற்காக நவ., 19ல், பிரதமர் மோடி 27குழுக்களை அமைத்தார். இதில், மூன்று பேர் கொண்ட குழு நேற்று தமிழகம் வந்தது. இதில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கூடுதல் செயலர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணைசெயலர் மற்றும் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை துணை செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில்  மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய நகர்ப்புறவளர்ச்சிச்துறை துணை செயலர் ஜானகி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து  வங்கிகளின் உயர்அதிகாரிகள் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள்,விவசாயிகள் ,சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.அப்போது, 100 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள்புழக்கம்; பழைய ரூபாய்நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்; ஏ.டி.எம்., மையங்களில் புதியநோட்டுகளை வினியோகிக்க செய்யப்படவேண்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர், வங்கிஅதிகாரிகள் மற்றும் அஞ்சல்துறையினருடன் ஆலோசனைநடத்திவிட்டு, டில்லி புறப்படுகின்றனர். 

இக்குழு, வரும் 25ம் தேதி கள ஆய்வுஅறிக்கையை  மத்திய அரசிடம் ஒப்படைக்க  உள்ளதாக தெரிய வருகிறது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...