மாநகராட்சியுடன் இணைந்து சிஎம்எஸ் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்


இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் கோவை மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் கோவை சிஎம்எஸ் பகுதியில் புதனன்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து, இப்பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் நமது நிருபரிடம் கூறுகையில்,



இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். கல்லூரி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். மாணவர்களின் இச்செயல் எங்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பணி முடிந்தவுடன் தொடர்ந்து இதேப்போன்று சுத்தமாக வைக்க நாங்கள் பணியாற்றுவோம்'' என்றார்.





தூய்மை பணி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. இதற்கான அனைத்து உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் கோவை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. மாணவர்களும், தன்னார்வலர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்ப்பது குறித்தும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகரமைப்பு திட்ட துணை அலுவலர் ஹேமலதா, மண்டல துப்புரவு அலுவலர் குணசேகரன், ஸ்வச் பாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமால்  ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இப்பணி நடைபெற்றது.





Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...