காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவர் மாயம்


ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோகுல்(19). இவர் கோவையில் தங்கி வெள்ளகிணறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே வகுப்பை சேர்ந்த பவதாரணி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இது பெற்றேருக்கு தெரியவர, காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்து இருவரும் தங்கள் பெற்றோருடன் செல்வதாக சம்மதம் தெரிவித்தனர். 

இந்த நிலையில் கோகுல் மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடிவு செய்தார். கடந்த மாதம் 23ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்ட கோகுல் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ராமகிருஷ்ணன் அவரை பல இடங்களில் தேடியும் கோகுல் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ராமகிருஷ்ணன் நேற்று காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார் . தொடர்ந்து வழக்கு பதிந்த போலீசார் மாயமான கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...