காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவர் மாயம்


ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோகுல்(19). இவர் கோவையில் தங்கி வெள்ளகிணறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே வகுப்பை சேர்ந்த பவதாரணி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இது பெற்றேருக்கு தெரியவர, காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்து இருவரும் தங்கள் பெற்றோருடன் செல்வதாக சம்மதம் தெரிவித்தனர். 

இந்த நிலையில் கோகுல் மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடிவு செய்தார். கடந்த மாதம் 23ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்ட கோகுல் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ராமகிருஷ்ணன் அவரை பல இடங்களில் தேடியும் கோகுல் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ராமகிருஷ்ணன் நேற்று காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார் . தொடர்ந்து வழக்கு பதிந்த போலீசார் மாயமான கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...