அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்று கோவையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், பல கருத்துக்கணிப்புகளும் NDA-வின் முன்னிலை குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தார். திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்றும், மாற்றத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

mAnypN3mfQkYmS3PH6cdnFvV1ptg4bFVR49OnHT0.jpg

தமிழகத்தில் ‘டபுள் இன்ஜின்’ அரசு அமைந்தால் மாநில வளர்ச்சிக்கு புதிய திசை கிடைக்கும் எனவும், மக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் எனவும் தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் எதிர்பார்ப்புகளை மீறி பாஜக வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்த அவர், தமிழக அரசியலிலும் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஊழல் சம்பவங்கள் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வரும்; சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.

அதேபோல், அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “நிச்சயம் வழங்கப்படும்” என உறுதியான பதில் அளித்தார்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...