500 ரூபா நோட்டு சவ ஊர்வலம் மார்க்சிஸ்ட் கட்சி நூதன போராட்டம்


செல்லாது என அறிவித்து நாட்டு மக்களை தெருவில் நிறுத்திய 500 ரூபாய் நோட்டுக்கு மாலை அணிவித்து சவ ஊர்வலமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.



நாட்டு மக்களின் 80 சதவீத புழக்கத்தில் உள்ள ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அவகாசம் தராமல் ஒரே இரவில்   பிரதமர் மோடி தடாலடியாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என மக்களின் எதிர்ப்பை சரிகட்ட சமாளித்தார். ஆனால்  இரண்டு வார காலம் கடந்த பின்னும் சரியாகவில்லை என்பது மட்டுமல்லாமல் மேலும், மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டம் வெடித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரியநாயக்கன்பாளைய ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம் பட்டி பிரிவில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 



முன்னதாக செல்லாது என அறிவித்த ரூ 500 பழைய நோட்டுக்கு சவ மாலை அணிவித்து நூதன போராட்டத்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் தொப்பம்பட்டி பிரிவில் உள்ள ஆந்திர வங்கியின் முன்பு  மோடி அரசின்  துக்ளக் தர்பார்  நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

இந்த போராட்டத்திற்கு சண்முக கனி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரிய நாயக்கன்பாளைய ஒன்றிய செயலாளர் என்.பாலமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணன், தேவராஜ், கோகுலகிருஷ்ணன், பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

மார்க்சிஸ்ட் கட்சியின் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...