500, 1000 ரூபாய் தடையால் தங்க நகை தயாரிப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் மனு

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் தடை அறிவிப்பால் தங்க நகை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் பல ஆயிரம் குடும்பத்தினர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

அகில இந்தியா அளவில் தங்க நகை தயாரிப்பில் கோவை மாவட்டம் மூன்றாம் இடம் என்பது உலகறிந்த உண்மை. இத்தொழிலை நம்பி சுமார் ஒரு லட்சம் பேர் வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அதிர்ச்சி தகவல் வழங்கியது. இதனால், கடந்த 15 நாட்களாக தங்க நகை வியாபாரிகள் வழங்கும் ஆர்டர் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தயார்நிலையில் உள்ள புதிய தங்க நகைகள் விற்பனையும் முற்றிலும் பாதிக்கப்பட்டு விற்பனை செய்யமுடியாமல் உள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையினால் இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 55 ஆயிரம் குடும்பத்தினர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால்,  தொழில் சமுதாயத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு மாவட்ட அரசின் மூலம் விரைவில் மக்கள் வங்கியில் செலுத்திய பணத்தை புழக்கத்திற்கு வழங்க வேண்டி அழுத்தம் தர வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...