கேரளத்தில் கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகள் குறித்து நீதி விசாரணை நடத்த கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை

கேரள மாநிலத்தில் 3 மாவோயிஸ்ட்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோவையில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக உள்ள மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்.



கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ரூபேஸ், சைனா, வீரமணி, கண்ணன், அனூப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புசட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு  கோவை முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த குற்றப்பத்திரிகைகளின் சுமார் 4200 பக்க நகல்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு வெள்ளியன்று (இன்று) வழங்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகின்ற டிசம்பர் மாதம் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பு கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். 



இதற்கு முன்னதாக, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட மாவோயிஸ்ட்கள், கேரளாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் 3 பேரை சுட்டுக்கொன்றதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சுட்டு கொல்லப்பட்ட 3 பேரும் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிறகு மாவோயிஸ்ட்கள் 5 பேர் மீதும் காவல் துறையினர் போலி ஆவணங்களை பயன்படுத்து சிம்கார்டு வாங்கியதாக தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தம் 28 பொய் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது குற்ற வழக்குகள் இல்லாத போதும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் அவர்களது தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்தார். 

மேலும், மாவோயிஸ்ட்டுகள் மீது சிறையில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெனவும் நீதிபதியிடம் மாவோயிஸ்ட்கள் புகார் தெரிவித்ததாகவும், சிறை கண்காணிப்பாளர் மூலம் புகார் தெரிவிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தியதாகாவும் அவர் தெரிவித்தார். 

இதையடுத்து மாவோயிட்கள் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...