தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டி அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் சார்பில் கோமாதா பூஜை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறுதரப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடுதிரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.



இதனிடையே, தமிழக முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைய வேண்டி கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் கோமாதா பூஜை இன்று நடைபெற்றது.



இதில், குலோகா கோசலா என்னும் கோமாதா வழிபாடு அமைப்பும் இன்று துவங்கப்பட்டது. இதனை அதிமுக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்து சிறப்பித்தார். பக்தி வினோத் சுவாமி மகாராஜ் குத்துவிளக்கேற்றி வேத மந்திரங்களை முழங்க வழிபாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோமாதாக்களுக்கு பெயர் சூட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.டி.நாகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.அறுகுட்டி, அம்மன் கே.அர்ஜூணன் உள்ளட்டோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.



முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி உதகை முத்துநாடு மந்து கோவிலில் பாரம்பாரிய தோடர் இன உடை அணிந்து சிறப்பு வேண்டுதல் நடைபெற்றது.

இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் கலந்து கொண்டார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...