காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள ஏடிஎம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதிலும், புதிய ரூபாயினை பெருவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதிலும் தாமதம் நிலவி வருகிறது. வங்கிகளிலும் நாள் ஒன்றுக்கு அதிகப்படியாக 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் போதிய பணம் இல்லாததால் மக்கள் அன்றாட செலவுகளுக்கு கூட பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, கோவை மாநகர காவல் துறை ஆணையத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் தற்போது அனுமதி வழங்கியுள்ளார்.

கோவை மாநகர காவல் துறை ஆணையரின் இந்த மனிதநேயமிக்க அறிவிப்பு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், அவரது இந்த சமூகத்தின் மீதான அக்கரைக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...