ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் சார்பில் உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிப்பு


உடல் பருமன் எதிர்ப்பு  விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் நவம்பர்  26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் சார்பில் உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.



ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் 136.1 யோகா அமைப்பும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமமும் இணைந்து நடத்திய இந்த உடல் பருமன் எதிர்ப்பு யோகா நிகழ்ச்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று யோகாவில் ஈடுபட்டனர்.



இந்நிகழ்ச்சியில், யோகா வல்லுநர் லோகேஷ்வரி அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அதிகப்படியான உடல் எடையும், பருமனும் மற்ற உயிரைப் பறிக்கும் நோய்களைப் போன்றதே. ஆண்டிற்கு சுமார் 2.8 மில்லியன் மக்கள் அதிகப்படியான உடல் பருமன் காரணமாக உயிரிழக்கின்றனர். மற்ற உயிர்கொள்ளும் நோய்களுக்கு உடல் பருமனும் ஒரு பாதையாக அமைகிறது. உடல் பருமனுக்காக தகுந்த சிகிச்சை பெறாமல் இருந்தால் புற்றுநோய், இருதய நோய், இரத்த அழுத்தம், கொழுப்புகள் அதிகரித்தல், தூக்கமின்மை உள்ளிட்ட நோய்கள் எளிதில்  தாக்கும் அபாயம் உள்ளது. உடல் பருமன் காரணமாக பெரும்பாலான மக்கள் மன அழுத்தமும், உலவியல் ரீதியான வேதனையையும் சந்தித்து வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் கட்டுப்பாடான உணவும், தகுந்த பயிற்சியுமே இதற்கான சிறந்த சிகிச்சை என பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சியும், உணவு பழக்கங்களுமே இதற்கு காரணம். இந்தியாவில் ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 41 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, குழந்தைகளும் இந்த நோயினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

மக்கள் தங்களது உடல் எடை மற்றும் பருமன் குறித்து பி எம்  ஐ மூலம் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். கலோரிகள் நிறைந்த  நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும். பசிக்கும் நேரத்தில் மட்டுமே உணவுகளை உட்கொண்டு தகுந்த உடற்பயிற்சிகள், நடைபயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மருத்துவ சிகிச்சைகள் இன்றி சிறப்பான உடல் ஆரோக்கியத்தினை பெற முடியும்'' என லோகேஷ்வரி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியினை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி துவக்கி வைத்தார். ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஏ.ரமேஷ், யோகா ஆசிரியர் ரிஷிகுமார் சந்தோஷ், 136.1 யோகா அமைப்பின் இயக்குநர் வி.செந்தில் குமார், பேராசிரியர் சி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...