500, 1000 ரூபாய் நோட்டு தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைக் கண்டித்து திங்களன்று (இன்று) நாடு தழுவிய அளவில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு பொது மருத்துவமனை முன்பு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.









இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...