ஈஷா நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை பழங்குடியின மக்களுக்கு வழங்கிட வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டம்


கோவை அருகே தனியார் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை பழங்குடியின மக்களுக்கு வழங்கிட வலியுறுத்தி, 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.



கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள முட்டத்துவயல் பகுதியில் அமெரிக்க கவுண்டர் என்ற முத்துச்சாமி என்பவருக்கு சொந்தமான 44.30 ஏக்கர் நிலம், நில உச்ச வரம்பு சட்டப்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 1992 ம் ஆண்டு 46 பேருக்கு அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது. பழங்குடியின மற்றும் பட்டியல் மக்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட அந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.

 இந்நிலையில் 44 ஏக்கர் நிலத்தை தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கக்கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சமூதி நீதிக்கட்சி, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நில மீட்பு போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் காவல் துறையினரின் தடுப்புகளை மீறி, பிரச்சனைக்குரிய இடத்தில் நான்குபுறமும்  குச்சிகளை நட்டு கயிறு கட்டி குடியேறும் போராட்டம் நடத்தினர். பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை அதிகாரிகள் பல்வேறு நபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து இருப்பதாகவும், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமப்பில் இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். ஈஷா யோகா மையம் உள்ளிட்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை பழங்குடியின மக்களுக்கு பிரித்து தர வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், நிலங்களை பழங்குடியின மக்களுக்கு பிரித்து தரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக  தெரிவித்தனர். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் மதுராந்தகி, வட்டாச்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  2 மணி நேரத்திற்கும் மேலாக 2 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...