சாலை சுத்தம் செய்யும் வாகனத்தை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகில் கோவை மாநகராட்சியும் ரூட்ஸ் நிறுவனமும் இணைந்து சாலை சுத்தம் செய்யும் வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இன்று (30.11.2016) கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். 



சாலை சுத்தம் செய்யும் வாகனம் சி.எஸ்.ஆர். புராஜக்ட் மூலம் “கிளீன் கோயமுத்தூர்” சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது. இந்த சாலை சுத்தம் செய்யும் இயந்திரமானது மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் தினந்தோறும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் உள்ள மண், கல் போன்ற இடர்பாடுகளையும், சாலையின் ஒரு புறங்களிலும் சேருகின்ற குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பேணி காப்பதற்கு ஏதுவான பணிகளை மேற்கொள்ளும். குறுகிய காலத்திற்குள் நீண்ட சாலை தூரத்தினை சுத்தம் செய்யும், மிகுந்த செயல்திறனும் நவீன தொழில்நுட்பங்களும் கொண்ட இயந்திரமாகும். 



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், ரூட்ஸ் குழும நிறுவனத் தலைவர் ராமசாமி, ரூட்ஸ் மல்டிகிளீன் நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் கார்த்திகேயன், ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிஞர் கவிதாசன், தலைமை நிதி அதிகாரி ரவி, ரூட்ஸ் மல்டிகிளீன் நிறுவன செயல் இயக்குநர் சந்திரசேகர், ரூட்ஸ் இண்டஸ்டிரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவன செயல் இயக்குநர் சரவணசுந்தரம் உதவி ஆணையர், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...