நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் வெள்ளிவிழா

கோவை: ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கில் இன்று இந்தியாவின் முதன்மை பொது காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் கோவை மண்டல அலுவலகத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். 



பின்னர், அவர் பேசுகையில்:-
கோவை மண்டல அலுவலகம் 1991ம் ஆண்டு 25 கோடியில் பிரீமியம் துவங்கப்பட்டு 2001ம் ஆண்டில் 100 கோடியை தாண்டியது. 2015-16ம் ஆண்டில் மதுரை, கோவை மண்டலம் சேர்ந்து 557 கோடி பிரீமியத்தை எட்டியது. மேலும் 2016-17ம் ஆண்டில் 710 கோடி பிரீமியத்தை அடைய திட்டமிட்டுள்ளது. கோவை மண்டல அலுவலகம் இன்று கோட்ட அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் என 77 அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும் 100 அலுவலகங்கள் விரைவில் அடையும் என நம்பிக்கை உள்ளது. இந்திய மற்றும் உலகளவில் மாபெறும் சாதனைகளை செய்து மிகவும் சக்திவாய்ந்த காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது. இந்தியாவில் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் முன்னோடியாக இன்று திகழ்கிறது. 

இந்தியாவில், பொது காப்பீட்டு திட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. சென்ற ஆண்டு 97 ஆராயிரம் கோடியாக, இருந்த பிரீமியம் இந்த ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் வரை வளர்ந்துள்ளது. இது தொடர்ந்து வளர்ந்து 2025ம் ஆண்டில் 5 லட்சம் கோடி வரை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2025ல் நியூ இந்தியா அசுரன்ஸ் 1 லட்சம் கோடி ரூபாய் பிரீமியம் எட்டும் என நம்புகிறேன். இன்று பொது காப்பீட்டு துறை பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்நிய முதலீட்டில் 26 சதவீதம் முதல் 49 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல புதிய நெறிமுறைகளை கையாளும் நிலையை கொண்டுள்ளது. பல்வேறு புதிய நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன. மிகவும் சீறிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு  சேவை செய்தால் மட்டுமே நாம் தொடர்ந்து காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்த முடியும் என அவர் கூறினார்.



பின்னர், நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஆண்டு மலரை அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். அதன்பின் நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் அவிநாசி புதிய கிளையின் அடிக்கல்நாட்டு பலகையை திறந்து வைத்தார்.









இதில், அந்நிறுவனத்தின் பொது மேலாளர் நரம்புநாதன், துணை பொது மேலாளர் ஆதியப்பன், மண்டல மேலாளர் பிரபாகர ராவ் மற்றும் அந்நிறுவனத்தின் அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...