கோவை மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கு

கோவை: அரசுக் கலைக்கல்லூரியில்  கோவை மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கு இரண்டு நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது. கருத்தரங்கு நிகழ்ச்சியை கோவை வருவாய் கோட்டாசியர் அலுவலர் மதுராந்தகி துவங்கி வைத்தார். தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அன்புச்செழியன் வரவேற்புரை  வழங்கினார். 
 


இந்நிகழ்ச்சி, அரசு அலுவலர்கள் எல்லா நடைமுறைகளிலும் தமிழ்மொழியை  கடைபிடிக்கும் வகையில் சட்டம் மற்றும் அதன் அடிபடையில் இந்த ஆலோசனை கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலர்களுக்கு இந்த தமிழ்மொழிப் பயிலரங்கு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 



மேலும், இன்று நடைபெறும் பயிலரங்கில் அரசு அலுவலர்களுக்கான அரசு ஆணைகள், அலுவலக குறிப்புகள், ஆட்சி மொழி சட்டம் வரலாறு, வரைவுகள் மற்றும்  செய்முறை ஆணைகள் தயாரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் இப்பயிலரங்கு நடைபெறுகிறது. இரண்டாம் நாளன்று நிறைவு விழா நடைபெறும். இவ் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவுள்ளார். 
 
இந்நிகழ்ச்சியில், அகரமுதலித் திட்ட இயக்குநர் (பொ) மற்றும் சேலம் மண்டலத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் செழியன், திருச்சிராப்பள்ளி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் துரை.தம்புசாமி, தூத்துக்குடி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் சிவசாமி மற்றும் 200க்கும் மேற்பட்ட கோவை மண்டல பல துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...