கே.எம்.சி.எச் நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்படும் நிலத்தை மீட்டுத்தரக் கோரி காவல் ஆணையரிடம் புகார்


கோவை நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது நிலத்தினை கே.எம்.சி.எச் நிர்வாகத்தினர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனை தடுத்த அவருக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் வெள்ளியன்று (இன்று) கோவை மாவட்ட காவல் ஆணையரைச் சந்தித்து மனு ஒன்றினை அளித்தார்.



இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் நஞ்சப்பன் கூறியதாவது:-

கடந்த 1991-யில் என்.ஜி.பி கல்லூரியின் பின்புறத்தில் உள்ள 68 சென்ட் இடத்தினை நான் வாங்கினேன். அப்போது கே.எம்.சி.எச் நிறுவனத்தினர் எங்களது இடத்தின் அருகே சுற்றுச் சுவர் கட்டத் துவங்கினர். அதில், கூடுதலாக சுமார் 10 சென்ட் அளவிலான இடத்தினை ஆக்கிரமிக்கும் வகையில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்றது.

இதுதொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் புகாரும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, கே.எம்.சி.எச் சுற்றுச் சுவர் கட்டும் பணியை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தொடர்ந்து இந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியினை மேற்கொள்ள மாட்டோம் என அப்பணியில் ஈடுபட்டிருந்தோரிடம் காவல் துறை சார்பில் எழுதியும் வாங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியில் கே.எம்.சி.எச் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை நிறுத்தச் சொன்ன எனது மனைவி சரஸ்வதியை தகாத வார்த்தையில் திட்டி, எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

நாங்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து உழைத்து வாங்கிய இந்த இடத்தினை கேஎம்சிஎச் நிறுவனத்தில் பணிபுரியும் தண்டபானி, சிவகுமார், நல்லதம்பி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...