கேஎம்சிஎச் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த வழக்கறிஞர் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்


கோவை மாவட்டம், கணபதியைச் சேர்ந்தவர் ஆர்.மில்டன் ஆனந்த் (44). இவருக்கு எம்.ஷீபா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில், மில்டன் ஆனந்த் கடந்த நவம்பர் 27ம் தேதியன்று இரத்த அழுத்தம் காரணமாக திடீரென சுயநினைவின்றி விழுந்தார். உடனடியாக அரவது உறவினர்கள் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின், டிசம்பர் 1ம் தேதியன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக கேஎம்சிஎச் சிறப்பு மருத்துவர்களும், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மில்டன் ஆனந்தின் குடும்பத்தினர் முன்வந்தனர். அதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளான கல்லீரல், கண்கள் மற்றும் தோல் தானமாக பெறப்பட்டது.

கல்லீரல் கேஎம்சிஎச் மருத்தவமனையில் உள்ள நோயாளிக்கு பொறுத்தப்பட்டது. தோல் மற்றும் கண்கள் கோவையில் உள்ள இரு வேறு தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, கேஎம்சிஎச் தலைவர் நல்ல ஜி.பழனிசாமி கூறியதாவது:- 

தற்போது மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இவர்கள் போன்று பலரும் தாமாக முன்வந்து உடலுறுப்புகளை தானமளித்தால் பலருக்கும் மறுவாழ்வு கிடைக்கும்'' என்றார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...