கருவூல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்ட கருவூல அலகில் காலியாக உள்ள ஊதிய ஏற்ற முறையிலான 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பகம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்காக, வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர கோவை மாவட்டத்தில் வசிக்கும் இதர தகுதியுடையோர்களும் தங்களது வயதுச் சான்று, கல்விச் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைக்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் கோவை- 641018 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2016 டிசம்பர் 30 ஆகும். இதற்கு 8ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கான வயதுவரம்பு 1.7.2016-யில் 30 வயதிற்கு மேற்படாத பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு உட்பட்டவர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...