உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நிகழ்ச்சியில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நிகழ்ச்சியில், 21 நபர்களுக்கு ரூபாய் 1.93 லட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



கோவை அரசினர் பொறியியற் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் உறுதி திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகள், 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகையாக நான்கு மணிநேர பணிகள் மேற்கொண்டவர்களுக்கு ஒருநாள் பணிக்கான சம்பளம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின்கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய தலைமை செயலர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்துள்ளார். 

மேலும், ஓய்வுத்திட்டத்தின் கீழ் பயனடைந்த குறைந்த பட்ச வயது வரம்பு 45-லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. திருமண திட்டத்தின் கீழ் உச்சவரம்பினை நீக்கி தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் திருமண நிதியுதவி வழங்க உத்திரவிட்டுள்ளார்கள்.

மேலும், கோவை மற்றும் திருச்சியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் ஆரம்ப நிலையில் செவித்திறன் குறையுடையோரை கண்டறியும் மையம் அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளன.

மேலும், கோவை மாவட்டத்தில் 3,849 மனவளர்ச்சி குன்றியோர்க்கு ரூபாய் 6 கோடியே 92 லட்சத்து 82 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட 470 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்புத் தொகையாக ரூபாய் 84 லட்சத்து 60 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. தசை சிதைவினால் பாதிக்கப்பட்ட 71 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 12 லட்சத்து 78 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட 64 நபர்களுக்கு பராமரிப்பு நிதியாக ரூபாய் 11 லட்சத்து 52 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 50,000 ஆயிரமும், காது கேளாத மாணவ மாணவியருக்கு ரூபாய் 25,000 ஆயிரமும், பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 42,860 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும், 13,250 மாற்றுத்திறனாளிகளுக்கு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 197 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1.08 கோடி மதிப்பீல் மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோல் மூன்று சக்கர சைக்கிள், கட்டணமில்லா பேருந்து பயண சலுகை, மடக்கு சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகள், திருமண உதவித்தொகை, தையல் இயந்திரங்கள், வங்கி மானியம், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை என கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 23,174 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 45 கோடி மதிப்பீல் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது'' என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1.93 லட்சம் மதிப்பீட்டில் காதொலிக்கருவி, சக்கர நாற்காலி, நவீன செயற்கைக்கால், ஊன்றுகோல் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். நிறைவாக முடநீக்கு வல்லுநர் சுதாகர் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி, அம்மன்.கே.அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு மற்றும் அரசு அலுவலர்கள் கோவை மாவட்ட மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...