44 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்கிறதா ஈஷா?



கோவையை அடுத்த முட்டத்துவயல் என்ற  பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமாக 44.30 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடம் நில உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்டு கடந்த 1992ம் ஆண்டு பழங்குடி இன மக்கள் 46 பேருக்கு ஒப்படைக்கபட்டது. ஆனால், போலியான ஆவணங்களை தயாரித்த ஈஷா யோக மையம் அந்த நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஈஷா அபகரித்ததாக கூறப்படும் 44.30 ஏக்கர் நிலத்தை மீட்டு தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை 15 நாட்களுக்குள் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



இந்த நிலையில், இன்று ஈஷா நிர்வாகத்தினர் இன்று 4 டிரேக்டர்களை கொண்டு அந்த நிலத்தை உழவு செய்தனர்.பேச்சுவார்த்தையில் இருக்கும் இடத்தை ஈஷா நிர்வாகம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வது கண்டனுத்துக்கு உரியது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வுகான வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...