ஜெயலலிதா மரணத்தை அறிந்து அன்னூரில் தீக்குளித்த விவசாயி மரணம்!


தமிழக முதல்வர் கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதை தொடர்ந்த் தமிழகதில் உள்ள அ.இ.அ.தி.மு.க.  தொண்டர்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியும் மொட்டை அடித்தும், மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர் . 

இந்த நிலையில்,  கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்காவிற்குட்பட்ட ஆத்திகுட்டை பகுதியைச்சேர்ந்த அதிமுக வின் தீவிர விசுவாசியான விவசாயி ராமச்சந்திரன். ஜெயலலிதா இறந்த செய்தியை அறிந்து வீட்டின் வெளிப்புறத்தை பூட்டிவிட்டு சமையல் அறையில் இருந்த இரண்டு லிட்டர் மண்ணெண்ணெயை எடுத்துக் கொண்டு  ஊருக்குள் வந்து தனது உடலில் ஊற்றி , தீ பற்ற வைத்துக்கொண்டார். 

இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து தண்ணீரை எடுத்து  ராமச்சந்திரன் மீது ஊற்றி அவரை காப்பாற்றினர். இதை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தகவல் சொல்லப்பட்டது உடலில் 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயமடைந்த அவரை 108 அவசர ஊர்தி மூலம் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். 

யாருமே வரவில்லை!

ஜெயலலிதா-வின் மரணச்செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற ராமச்சந்திரனை பார்க்க அக்கட்சியை சேர்ந்த ஒருவர் கூட வரவில்லை என்பது, ராமச்சந்திரனின் குடும்பத்தாருக்கு சொல்லிலடங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...