மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 17 லாரிகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது



கோவையில் கடந்த அக்டோபர் மாதம் எட்டிமடையில் சிறை பிடிக்கப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 20 வாகனங்களில் 17 வாகனங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. கேரள மாநிலத்தை ஒட்டிய கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை அவ்வப்போது சிலர் சட்ட விரோதமாகக் கொட்டிச் செல்கின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி எட்டிமடையில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை அந்தப் பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.


இதுகுறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர், கழிவுகளைக் கொட்டித் தரம் பிரிக்கும் தொழிலில் ஈடுபட்ட முகமது இலியாஸ், சாஜி, சபீர் மற்றும் ஓட்டுநர்கள் உள்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 24 பேரைக் கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள 3 பேரைத் தேடி வருகின்றனர். இந்த வழக்கு கோவை ஜெ.எம்.7 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கழிவுகளுடன் பிடிபட்ட வாகனங்களில் 17 வாகனங்களைத் திருப்பி அனுப்ப நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.


அதன் பேரில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 17 வாகனங்கள் கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில் அவையும் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு விரைவில் திருப்பி அனுப்பப்படும் என்று க.க.சாவடி போலீஸார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...