மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு

சேலம் மாவட்டம், தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்(28), தந்தை கந்தசாமி – விவசாயி மற்றும் தாயார் சரோஜா அவர்களுடன் வசித்து வந்தார். வெங்கடாசலம் கடந்த 7-ம் தேதி காலை 11 மணியளவில் திருப்பூரில் உள்ள அவர் வேலை செய்யும் பனியன் கம்பெனியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெருந்துறை மெயின் ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்து கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் வெங்கடாசலம் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இவர் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை. உடனடியாக அவர் ஈரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 7-ம் தேதி மாலை 5.00 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக கே.எம்.சி.எச் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து, தாதாபுரம் பஞ்சாயத்து தலைவர் அரசி மாதையன் அறிவுரையின்படி, வெங்கடாசலம் குடும்பத்தார், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய கோவையிலுள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு 08.12.16-ம் தேதியன்று கொண்டுவரப்பட்டது.இதன்படி வெங்கடாசலம் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிச்சாமி கூறுகையில்; மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய வெங்கடாசலம் குடும்பத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...