மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவையில் திருநங்கைகள் மெளன அஞ்சலி ஊர்வலம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருக்காக கண்ணீர் அஞ்சலி, மெளன அஞ்சலி ஊர்வலம், மொட்டை அடித்தல் உள்ளிட்டவைகள் அதிமுக கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் செலுத்தி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் திருநங்கைகள் சார்பாக ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட அவர்கள் கவுண்டம்பாளையத்திலிருந்து டி.வி.எஸ் நகர் வரை மெளன ஊர்வலமாக சென்றனர். 



இதுகுறித்து கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க செயலாளர் பூங்குழலி கூறும்போது, கோவை மாவட்டத்தில் 480-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பசுமை வீடுகள், ஆதார் கார்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், ரேசன் கார்டுகள் குடும்பங்களுக்கு தான் வழங்கப்படும். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இல்லை. ஆனால், ஜெயலலிதா ரேசன் கார்டுகள் 1 வாரத்தில் எங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். 



எங்களுக்கு வேலைகளும் தற்போது கிடைக்கிறது. எங்களாலும் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியும் என்பது ஜெயலலிதாவின் ஆட்சியில்  தான். அவர்கள் இறந்த செய்தியை கேட்டு எங்களால் 2 நாட்களாக தூங்க முடியவில்லை, உணவு உண்ணவில்லை , இனிமேல் இவரை போல தலைவர் வருவாரா என்பது சந்தேகமே என்று கூறினார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...