லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலி


கோவை எல்&டி புறவழிச்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள். ஒரு பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை வெள்ளலூர்  பகுதியைச் சேர்ந்தவர் மதபோதகர் ஜீவா. இவரது மனைவி ஜெபா, ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா ஆகியோருடன் இன்று பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற ஜீவா, மத பிரச்சாரங்களை முடித்துவிட்டு கோவை வெள்ளலூர் திரும்பினார். 

அப்போது சித்ரா என்ற உறவுக்கார பெண்ணையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கோவை திரும்பினார். கோவை எல்&டி புறவழிச்சாலை அருகே கஞ்சிகோணாம்பாளையம் என்ற பகுதி வழியாக வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது இவர்களது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா உள்ளிட்ட மூவரும் பலியானார்கள். சித்ரா என்ற பெண் மட்டும் பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து போத்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...