சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாடு தொடர்பாக சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் கோவையில் துவக்கம்!


சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பான சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் இன்று முதல் கோவையில் தொடங்கியுள்ளது.



இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையத்தின் செயல் அலுவலர் ரவி நாயுடு மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், உலக நாடுகள் முழுவதும் 1 லட்சத்து 44 ஆயிரம் வேதிப்பொருட்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. வேதிப்பொருள்களின் மூலம் ஏற்படும் பாதிப்பின் காரணமாக 4 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும், பலருக்கு புற்றுநோய்களும் ஏற்பட்டுவருகின்றது.

இதிலிருந்து காப்பாற்றுவதற்காக உலக பாதுகாப்பு என்ற அமைப்பின் மூலம் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதற்கான அறிவியல் தொழில் நுட்பத்தினை தெரிந்து கொள்ளவதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையம் மற்றும் நியூகாசில் பல்கலைக்கழகமும் இணைந்து மாசுபட்ட இடங்களை மீட்டெடுப்பதற்கான சர்வதேச கருத்தரங்கினை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

கோவையில் இன்று முதல் துவங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பல்வேறு நியுசிலாந்து, அமெரிக்கா, போன்ற 12 நாடுகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் 18 பேராசிரியர்கள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களின் மூலம்சு ற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளனர். இந்தியாவின் சார்பில் 359 ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் பெறப்படும் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்த அவர்கள் மாசு மதிப்பிடல் மற்றும் மீட்டெடுத்தலுக்கான மையம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுவரை புதிய தொழில்நுட்பம், மென்பொருள் பொறியாளர்கள், இளைஞர்களை வைத்து 5 சதவீதம் மாசினை சுத்தப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...