ஜெயலலிதா உயிரிழந்ததை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முயற்சிக்கிறது என எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் குற்றச்சாட்டு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஏற்படுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முயற்சிப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெளகலான் பாகவி குற்றம்சாட்டியுள்ளார்.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தெளகலான் பாகவி, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்தார். 

அ.தி.மு.க கட்சியில் அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவது உட்கட்சி விவகாரம் எனவும், அது குறித்து மற்றவர்கள் கருத்து சொல்ல தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிட்டத்தை பயன்படுத்தி பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சிப்பதாகவும், அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கவனத்துடன் செயல்பட வேண்டுமெனவும் தெளகலான் பாகவி தெரிவித்தார்.

பணம் மதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசு சாதாரண ஏழை மக்கள் மீது அறிவிக்கப்படாத போரை தொடுத்து இருப்பதாகவும், 35 நாட்களுக்கு மேலாகியும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவது மத்திய அரசு தோல்வியடைந்து இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 

வர்தா புயல் நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், அக்கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெளகலான் பாகவி வலியுறுத்தினார்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...