பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி குறைந்த எண்ணிக்கையை கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவல்நிலைய தலைமை காவலர் உள்ளிட்ட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்த நிலையில் அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி கோவை அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.

அதனடிப்படையில், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட கோவை பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் முரளி, அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த பார் ஊழியரான சுரேஷ் என்பவரை பிடித்ததுடன் அவரிடமிருந்து சுமார் 1400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் 192 மது பாட்டில்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். 

இந்நிலையில், 1200 மது பாட்டில்களை ஆய்வாளர் பதுக்கியுள்ளதாக மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுக்கு புகார் வந்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை வெளிப்படவே அவரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஒருவார காலமாக இது தொடர்பாக எவ்வித தகவலும் அளிக்காத பீளமேடு காவல்நிலைய உளவு பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...