கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் பணமில்லா பரிவர்த்தனை கருவிகள் அறிமுகம்


ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பினை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை ரயில் நிலையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக முன்பதிவு மையத்தில் 3 புதிய கருவிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யும் சேவை துவங்கப்பட்டுள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்து சில்லரை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ரயில்நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதில் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச்சீட்டு பெறும் மையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக புதிய கருவிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள கடன் அட்டைகளை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறுவதற்காக ஒரு இயந்திரம் செயல்பட்டு வந்த சூழலில் தற்போது மேலும் இரண்டு கருவிகள் மூலம் ரயில்வே நிர்வாகம் சேவையை துவங்கியுள்ளது.

இதனால் சில்லரைக்காக ஏற்படும் சிறு சிறு வாக்குவாதங்கள் தவிர்க்கப்படும் என்பதால் அதனை வரவேற்பதாக கருத்து தெரிவித்த பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறுவதற்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட வேண்டும் எனவும் சாதாரண பயண சீட்டு வழங்குமிடத்திலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதே போல் மூத்த குடிமகன்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் செயல்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். தற்போது கோவை ரயில்நிலையத்தில் முன்பதிவு மையத்தில் உள்ள 10 கவுண்டர்களில் 4 மட்டுமே இயங்கி வருவதும் சாதாரண பயணச்சீட்டு வழங்குமிடத்தில் 3 கவுண்டர்கள் மட்டுமே இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...