உக்கடம் பெரிய குளத்தில் மீண்டும் மீண்டும் பரவும் ஆகாயத் தாமரைகள்!

கோவை, உக்கடம் பெரிய குளத்தில் ஆகாயத் தாமரையை பலமுறை கோவை மாநகராட்சி சார்பில் தூர்வாரப்பட்டும், மீண்டும் மீண்டும் ஆகாயத் தாமரை பரவி வருகிறது.



இது குறித்து கோவையை சேர்ந்த தன்னார்வலர் ஓசை சையது கூறுகையில்:

'கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களில் ஆகாயத் தாமரை பரவி வருகிறது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர். பொதுவாக குளங்களில் கலக்கப்படும் கழிவு நீர்களால் ஆகாயத்தாமரை பரவி வருகிறது. உக்கடம் பெரிய குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரும் இதற்கு காரணம். கழிவு நீர் கலக்கப்படாமல் இருந்தால் ஆகாயத்தாமரை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. கோவையில் இந்த வருடம் பருவ மழை இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும் உக்கடம் பெரிய குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்படவுள்ளது, இதன்மூலம் குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குளத்திற்கு விடப்படும். அதன்பின் குளங்களில் ஆகாயத்தாமரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது'.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...