பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம் - 6வன சரகங்களில் 13 க்கும் மேற்பட்ட தன்னார்வாளர்கள் பங்கேற்பு.


பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, சிங்கவால் குரங்கு என மாமிச உண்ணி, தாவர உண்ணி விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் விலங்கு இடம் பெயர்ந்துள்ளாதா? அதிகரித்து உள்ளாதா? என ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது .

 

அதன்படி இந்தாண்டுக்கான குளிர் கால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலரந்தி, வால்பாறை, மானாம்பள்ளி , உடுமலை, அமராவதி ஆகிய 6 வனசரகங்களில் 124 நேர்கோட்டு பாதையில் 130 க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள் தன்னாவாளர்கள் மற்றும் வன ஊழியர்கள் கலந்துக் கொண்டு கணக்கெடுக்கும் பணியில் நேற்று  காலை 6 மணி முதல் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி வனசரக பகுதியில் வனசரகர் ரவிசந்திரன் தலைமையில் போத்தமடை, சேத்துமடை, ஆழியார் வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுக்கும் பணியில் முதல் 3 நாட்களுக்கு மாமிச உண்ணிகளும், அடுத்த 3 நாட்களுக்கு தாவர உண்ணிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தபடுகிறது. கணக்கெடுப்பின் போது நேர்கோட்டில் உள்ள வன விலங்குகளின் ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு விலங்கு களின் கால்தடம், எச்சம், நக கீறல்கல் உள்ளிட்டவை மூலம் கணக்கெடுக்கபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த வனப்பகுதியில் உள்ள பினம் தின்னி கழுகுகளும் இதில் கணக்கெடுக்கபடுகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லததால் வனப்பகுதியில் தண்ணீர் பற்றக்குறை காரணமாக  பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்துள்ள காரணத்தால் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விலங்குகள் தென்படாததால்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...