ஆதரவற்றோர் பசியை தீர்க்கும் கோவை உணவு வங்கியின் வெற்றிகரமான 100-வது நாளில் 10 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாற்றம்


கோவை மாவட்டத்தில் பல ஆதரவற்றோர் இல்லங்களிலும், சாலையோரங்களிலும் ஏராளமான மக்கள் அன்றாடம் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் கோவை உணவு வங்கி (Food Bank Coimbatore) என்னும் தன்னார்வ அமைப்பினர் உணவு தயாரித்து பரிமாறிவருகின்றனர்.



இவ்வமைப்பு துவங்கப்பட்டு தற்போது 100-வது நாளாக ஆதரவற்றோர்களுக்கு உணவு பரிமாறுவதை முன்னிட்டு கோவை உணவு வங்கியின் சார்பில் இன்று கோவை வஊசி மைதானத்தில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து கோவை உணவு வங்கியின் நிறுவனர் வைஸ்னவி நமது நிருபரிடம் கூறியதாவது:-



இவ்வமைப்பு துவங்கப்பட்டு வெற்றிகரமாக இன்றுடன் 100-வது நாளை அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று (சனி) மதியம் 3 மணியவில் இருந்து காய்கறிகளை வெட்டது துவங்கினோம். இன்று காலை 4 மணியவில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. நாங்கள் காய் பிரியாணி, தயிர்-வெங்காயம் மற்றும் இனிப்பு தயாரித்துள்ளோம். எங்களுடன் இணைந்து பலரும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.



இன்று சுமார் 10 ஆயிரம் பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது கோவையில் 65 பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கும், சாலையோர மக்களுக்கும் பரிமாறப்பட உள்ளது. எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் இருந்து சபிதா மற்றும் அருண் ஆகிய ஆசிரியர்களும் மாணவர்களும் தற்போது எங்களுடன் இணைந்து இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.



இதுகுறித்து எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரி ஆசிரியயை சபிதா நம்மிடம் கூறுகையில், 

கோவை உணவு வங்கியின் இந்த சேவை பாராட்டுக்குறியது. தற்போது நாங்களும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்களுடன் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இதில் இணைந்துள்ளனர். மாணவர்கள் சமைக்க உதவியும், அதனை பரிமாறுவதற்கும் முன்வந்துள்ளனர். 



ஆதரவற்றோர்களுக்கு என பல தன்னார்வ அமைப்பினர் செயல்பட்டு வந்தாலும் கோவை உணவு வங்கி அமைப்பினர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இப்பணியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது கல்லூரியில் உள்ள மற்ற ஆசியிர்களிடம் இதுகுறித்து கூறி இவ்வமைப்பில் இணைந்து பணியாற்ற செய்வோம்'' என்றார்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...