வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை


கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (83). அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், பழனியம்மாளின் பேரனான கருணாகரன் வழக்கம்போல காலை உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்தபோது பழனியம்மாள் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து கருணாகரன் தனது உறவினர்களுக்கும் இரத்தினபுரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி பழனியம்மாள் துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும் பழனியம்மாளின் கையில் இருந்த 2 சவரன் மதிப்பிலான தங்க வளையல் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பழனியம்மாளின் பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...