வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வங்கியாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை


வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு உடனடியாக மாதாந்திர ஊதியம் வழங்க நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி வங்கியாளர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆலோசனை மேற்கொண்டார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று (இன்று) நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்  ஆலோசனைப்படி வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு நிலுவையிலுள்ள மாதாந்திர ஊதியத் தொகையினை உடனடியாக வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கடந்த ஒருமாத காலமாக புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வங்கியின் மூலம் வழங்கப்பட்டு வருவதுடன் பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை திரும்ப பெறும் பணி நடைபெற்று வருவதாலும் ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவதாலும் சில காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு வால்பாறை தேயிலைத்தோட்டப் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்குவதில் வங்கிகளுக்கு திடீர் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க சில ஆலோசனைகள் வங்கியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வால்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் பாரத வங்கி, இந்திய வங்கி, யூனியன் வங்கி ஆகிய வங்கிகள் மூலம் நாளை முதல் தேயிலைத்தோட்ட நிறுவனங்களுக்கு சென்று பணியாளர்களிடம் ஒப்புதல் படிவம் பெற்று தேயிலைத்தோட்ட நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்யப்படும்.

அதேப்போல் ஒவ்வொரு தேயிலைத்தோட்ட நிறுவனத்துக்கும் நேரில் சென்று பணியாளர்களுக்கு பணம் வழங்கும் விவரம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மேலும், மூன்று வங்கியின் மூலமாக நாளை முதல் பணப்பரிவர்த்தனை துவங்கி பத்து தினங்களுக்குள் அப்பகுதியிலுள்ள அனைத்து தேயிலைத்தோட்ட பணியளர்களுக்கும் நிலுவையிலுள்ள கடந்த மாத ஊதியத்தொகை வழங்கப்படும்.

வங்கி கணக்கு தொடங்காத பணியாளர்கள் உடனடியாக வங்கி கணக்கு துவங்கிக்கொள்ள வேண்டும். எனவே அனைத்து தேயிலைத்தோட்ட பணியாளர்களும் வங்கியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்களுக்குரிய பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, மாவட்ட வருவாய் அலுவலர் த.கிருஸ்துராஜ், தொழிலாளர் நலவாரிய இணை ஆணையர் மாரிமுத்து, வால்பாறை நகர கூட்டுறவு வங்கித் தலைவர் அமீது, முன்னோடி வங்கி மேலாளர் கனகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம் மற்றும் வங்கி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...