மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலித்சேனா ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாதமாதம் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். கோவை வடக்கு மற்றும் தெற்கு தாலுகா அலுவலகங்களில் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அலுவலர்கள் காலதாமதப்படுத்தி வருகின்றனர். உடனடியாக புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் வழங்குவதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு கல்விக் கடன் வழங்காமல் வேண்டுமென்றே அலைக்கழித்து வரும் வங்கி அதிகாரிகளின் அத்துமீறல் செயலைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த நவம்பர் 8ம் தேதியன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டு தடையால் ஏழை நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசைக் கண்டித்தும் கோவை மாவட்ட தலித்சேனா சார்பாக செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு கோவை மாவட்ட தலைவர் வி.புஸ்பானந்தம் தலைமை வகிக்க வழக்கறிஞர் ஜி.சிவலிங்கம் வரவேற்புரையாற்றினார்.

அன்னை தெரசா அறக்கட்டளை மாநில தலைவர் மற்றும் நிறுவனர் முருகேசன் பெஞ்சமீன் முன்னிலை வகித்தார். அம்பேத்கர் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் நலச்சங்கம் தலைவர் தலீத் சு.ஜெயராஜ் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித்சேனா மாநில துணைத் தலைவர் சி.நொய்யல்சாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதவியாளர் (எளியோர் வரியோர் மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்) ஹே.பொதுவுடைமை கோவிந்தராஜ், சமூக ஆர்வலர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...