குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'அங்காடி 2016'


கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்கள் சங்கம் சார்பில் 'அங்காடி 2016' என்ற இரண்டு நாள் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று துவங்கியது. இக்கண்காட்சியினை ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் சொர்ணலதா தொடக்கி வைத்தார். 



இது குறித்து மாணவர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா கூறுகையில், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் மூன்றாவது முறையாக இந்த வருடமும் வணிகவியல் துறை சார்பில் 'அங்காடி' என்னும் தலைப்பில் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 



இந்நிகழ்ச்சி வணிகவியல் துறை மாணவர்களுக்காக நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் வணிகத்துறையில் சிறந்து விளங்கவும், முன்னோடியாக திகளவும் இது போன்ற நிகழ்வுகள் உதவியாக இருக்கும். இரண்டுநாள் நடைபெறும் இந்நிகழ்வில் மாணவர்களுக்கு தொழில் துறையில் பல்வேறு வகையில் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட அரங்குகளும், 180 மாணவர்களும் கலந்து இந்நிகழ்வை நடத்துகின்றனர்'' என கூறினார்.



இதில், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் குமார், இயக்குநர் விஜிலா கென்னெடி மற்றும் வணிகவியல் துறை மாணவர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக ஐந்து அரங்குகளில் தன்னார்வ அமைப்புகளான பசுமை கோவை சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...