தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டமைப்பு மக்கள் நலக்கூட்டணியாக மாறியதே தவிர இது ஒரு நிரந்தர அமைப்பு இல்லை என திருமாவளவன் தகவல்


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூடலூரில் நடைபெற உள்ள பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில்,

கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக பிரதமர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை அறிவித்ததின் மூலம் கருப்பு பணம் இரட்டிப்பாக மாறி உள்ளதாக குற்றம்சாட்டினார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற உள்ள மாநாட்டில் ஒருமித்த கருத்து உள்ள இடத்து சாரி கட்சி தலைவர்கள் பங்கேற்பதாகவும், பணவிவகாரம் தொடர்பாக பிரதமரின் கருத்தை ஆதரிக்கும் மதிமுக பங்கேற்காது எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பாக வைகோவிடம் தெளிவுபடுத்தி விட்டதாகவும் இது மக்கள் நலக் கூட்டணியில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். மக்கள் நலக் கூட்டமைப்பு நிரந்தமில்லை என டி.கே.ரங்கராஜன் தெரிவித்த கருத்தை ஆமோதித்த திருமாவளவன், மக்கள் பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து போராட மக்கள் நலக்கூட்டமைப்பு அமைக்கப்பட்டதாகவும், தேர்தலுக்காக அது மக்கள் நலக் கூட்டணியாக மாறியதே தவிர இது நிரந்தர கூட்டமைப்பு இல்லை என தெரிவித்தார். மேலும், மக்களின் பிரச்சனைகள் அடிப்படையில் ஒன்று கூடுவோம் எனவும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஜல்லிகட்டு தொடர்பாக திமுகவின் அனைத்து கட்சி போராட்டம் தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளது குறித்து தனக்கு தகவல் வரவில்லை எனவும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நீதிமன்ற நடவடிக்கையும் தாண்டி நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

பொது சிவில் ஷரியத் சட்டம் இஸ்லாமியர்களின் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. பாஜக அரசு வேண்டும் என்றே இந்த செயல்களில் ஈடுபடுகிறது. இதனை எதிர்க்கும் வகையில் கூடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...