கதவடைப்பு செய்யப்பட்ட நிறுவனத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை சூலூரில் உள்ள தனியார் (டி.டி.எல்) வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் கதவடைப்பு செய்ததை கண்டித்தும், நிறுவனத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கோவை தொழிலாளர் துறை அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் டி.டி.எல் என்ற தனியார் வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் வைரம் பட்டை தீட்டும் மையங்கள் நரசிம்மநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சூலூரில் செயல்பட்டு வரும் மையத்தை கதவடைப்பு செய்த நிர்வாகம், அதில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றியுள்ளனர். முன்னறிவிப்பின்றி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சூலூரில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிக்கு செல்ல 40 கிலோ மீட்டர் தூரம் என்பதால் அனைத்து பெண் தொழிலாளர்களும் அங்கு வேலைக்கு சென்று வர முடியாது எனவும், எனவே சூலூரில் உள்ள நிறுவனம் தொடந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமிநாராயணன் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தொழிலாளர் துறை அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தொழிலாளர் ஆய்வாளர் லட்சுமி நாராயணன் அறை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் காரணமாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருவதைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஏராளமான பெண் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுடனும், அவர்களுடன் வந்த சிஐடியு தொழிற்சங்கத்தினருடனும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...