டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுமிகள் உட்பட 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை


கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் மற்றும் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டெங்குவால் பாதிக்கப்பட்ட மூவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும், இதுகுறித்து தெரிவித்த இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல், தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சை காரணமாக மூவருக்கும் உடல்நிலை தேறிவருவதாகவும், டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள், இரத்ததட்டுகள் போன்றவை போதுமான அளவில் உள்ளதாகவும் கூறினார். 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், பொதுமக்கள் தங்களுடைய சுற்றுப்புறத்தை நீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...