செயல்படாத நிலையில் இருக்கும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மிற்கு மாலை அணிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் இருக்கும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அமல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் பணபுழக்கம் தடைபட்டுள்ளது. பணம் எடுக்க மக்கள் வங்கிகள் முன்பாகவும், ஏ.டி.எம் மையங்கள் முன்பாகவும் நாள்தோறும் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது. 

கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் 90 சதவிகித ஏ.டி.எம்கள் செயல்படாமல் இருந்து வருகின்றது. 

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்திற்கு அனைத்திந்த இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது வங்கி ஏ.டி.எம்-கள் அனைத்தும் முழுமையாக செயல்படவும், 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் தடையின்றி கிடைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தை மாற்றுவதற்காக காலத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவினையும் அவர்கள் வழங்கினர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...