கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ஏசுகிறிஸ்து வாழ்க்கை வரலாறு குறித்து அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் நாடகம் நடத்தினர்


கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதில், ஏசு பிறப்பு உள்ளிட்ட அவரது வாழ்க்கை குறித்து நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் தத்ரூபமான நாடகம் அங்கிருந்தோரை வெகுவாக கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் ஷேர்லி தாமஸ் வரவேற்புரையாற்றினார். அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையுரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் விழா என்பது சாதிமத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படுகின்ற விழாவாக அமைகின்றது. அறியாமை, மூடநம்பிக்கை, பேராசை, வெறுப்புணர்ச்சி போன்றவைகளை அகற்றுவதற்காக தெய்வ அவதாரமாகிய ஏசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார் என்றும், உலகம் முழுவதும் ஆன்மீக ஒளியை பரப்புவதற்காக கிறிஸ்துமஸ் விழா இசை நிகழ்ச்சிகளுடன் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து, கோவை இன்டச் ஃபெல்லோசிப் இன்டர்நேசனல் முதன்மை பாஸ்டர் எம்.அருமைநாயகம் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது மாணவர்களின் ஏசுபிறப்பு நாடகம் தத்ரூபமாகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்ததாகவும் பாராட்டு தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார். நிறைவாக பேராசிரியர் முனைவர் வசந்தகல்யாணி நன்றியுரை வழங்கினார்.





Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...