96-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் இன்று ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 96-வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி குளக்கரை பகுதியில் உள்ள நம்ம டாய்லெட்-ஐ மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, சுந்தராபுரம், முருகா நகர், பெரியசாமி சேவா விதி ஆகிய பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனி நபர் கழிப்பிடத்தையும், 98-வது வார்டுக்குட்பட்ட எல்ஐசி காலனியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, முருகா நகர் பகுதியில் தனியார் இருசக்கர வாகன கடையில் தேவையில்லாத டயர்களை அகற்றும் படி பலமுறை அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த அதனை உரிமையாளர் அகற்றாததால், ஒரு லோடு டயர்களை மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டதை அவர் பார்வையிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...